அனைவருக்கும் வணக்கம்
நமது எஸ். ஆர். எம் பாரிவேநதர் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பாக பாரதியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு *பாரதி விழா வெகு சிறப்பாக இணையவழியில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய ஐயா கலைமாமணி பேராசிரியர் முனைவர் கரு நாகராசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.
பாரதி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி,ஓவியப் போட்டி மற்றும் குறுக்கெழுத்துப்போட்டியும் நடைபெற்றது (6/12/2021 முதல் 9/12/2021)..போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்ட ன.
முன்னதாக முனைவர்,கெலன் ப.கவிதா பாரிவேந்தர் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் நமது கல்லூரி மாணவ, மாணவியரின் பாட்டு, நடனம் மற்றும் கவிதை பாடும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நம் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும், தமிழ் பேராயத்தின் பேராசிரியர்களும், தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.